திருச்சி நகைக் கொள்ளை: மீண்டும் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்..!

 

திருச்சி நகைக் கொள்ளை: மீண்டும் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்..!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் சிக்கிய சுரேஷ், மணிகண்டன் மற்றும் திருவாரூர் முருகனிடம் இருந்து சுமார் 26 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் போல் சென்று, பல நாட்கள் நோட்டமிட்டு அவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதையும், எடை இயந்திரத்துடன் கூடிய வேனை அவர்கள் திருடுவதற்காகப் பயன்படுத்துவதையும் விசாரணையில் கண்டுபிடித்த காவல்துறையினர் அந்த வேனை பறிமுதல் செய்தனர்.

Lalitha jewellery

அனைத்து நகைகளையும் ஒப்படைத்து விட்டதாகக் கூறிய கொள்ளையன் முருகனிடம் இருந்து, இன்று கல்லணையில் மறைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

Murugan

அதனையடுத்து, கொள்ளையில் சிக்கிய சுரேஷின் 7 நாட்கள் காவல் முடிந்து இன்று முருகனைத் திருச்சி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தியுள்ளனர். சுரேஷுக்கு இன்னும் 15 நாட்கள் அதாவது நவம்பர் 4 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.