திருச்சியில் லாரி மீது கார் மோதி விபத்து: 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

 

திருச்சியில் லாரி மீது கார் மோதி விபத்து: 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து விராலிமலை நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னை மேடவாக்கத்தில் இருந்து திருச்சி நோக்கி 10-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று அதிவேகமாக சென்றது.

அதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாடுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடைபெற்றது தெரிய வந்துள்ளது.