திருச்சியில் உயிர் தப்பிய 120 பயணிகள்! விமானத்தில் விநோத விபத்து!

 

திருச்சியில் உயிர் தப்பிய 120 பயணிகள்! விமானத்தில் விநோத விபத்து!

விமானத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்த காரணத்தைக் கண்டுபிடித்ததினால் அதிர்ஷ்டவசமாக திருச்சியில் 120 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானம் மலேசியா செல்ல இருந்து. இந்நிலையில் இந்த விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

விமானத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்த காரணத்தைக் கண்டுபிடித்ததினால் அதிர்ஷ்டவசமாக திருச்சியில் 120 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானம் மலேசியா செல்ல இருந்து. இந்நிலையில் இந்த விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  விமானம் கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில், திருச்சியில் இருந்து மலேசியா செல்வதற்காக பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில், விமானத்தில் அமர்ந்து இருந்த பயணிகள் சிலர்  தங்களுக்கு அதிகமான அளவு மூச்சு திணறுவதாக விமானத்தில் இருந்து பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்தனர்.

flight

பயணிகளின் புகாரைத் தொடர்ந்து கிளம்ப இருந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. விமானத்தில் நடைப்பெற்ற சோதனையில், மலேசியா கிளம்ப இருந்த விமானத்தில் வழக்கமாக ஆக்ஸிஜன் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் கோளாறு இருந்தால், விமானம் பறக்கும் போதும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து விடும். புறப்படுவதற்கு முன்பாகவே விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.