திருச்சியில் ஆணவ கொலை | தமிழகத்தில் குடிபோதையில் அதிகரிக்கும் குற்றங்கள்    

 

திருச்சியில் ஆணவ கொலை | தமிழகத்தில் குடிபோதையில் அதிகரிக்கும் குற்றங்கள்    

சமீப காலங்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளினால் தமிழகத்தில் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். தமிழகம் எங்கும் கடந்த வாரத்தில் வெவ்வெறு மாவட்டங்களில் மது போதையில் இருப்பவர்கள் காவலர்களிடம் தகராறு செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சமீப காலங்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளினால் தமிழகத்தில் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். தமிழகம் எங்கும் கடந்த வாரத்தில் வெவ்வெறு மாவட்டங்களில் மது போதையில் இருப்பவர்கள் காவலர்களிடம் தகராறு செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

tasmac

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் வேறு ஜாதி பெண்ணை காதலித்த கனகராஜ் என்பவரை அவரது அண்ணனே வெட்டிக் கொலை செய்தார். வெட்டும் போது அதனை தடுத்த காதலி வர்ஷினி பிரியாவுக்கும் வெட்டு விழுந்ததில் அவரும் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் ஆணவ கொலைக்கு ஓட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை பசு மடம் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 30). பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியாகு என்பவரின் மகளும், கல்லூரி மாணவியுமான நிவேதாவிற்கும் காதலித்து வந்தனர். நிவேதாவுடன் திருச்சியின் பல்வேறு இடங்களில் சுற்றி வந்து இவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தார். 

victim

இவர்களது காதல் விவகாரம், நிவேதாவின் அண்ணன் ஹென்றி என்ற வினோத்துக்கு தெரிந்ததும், சத்தியநாராயணன் வேறு ஜாதி என்பதால் அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தங்கையின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல், சத்தியநாராயணனையும் அழைத்து கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் நிவேதாவுடனான காதலை கைவிடவில்லை. 

தொடர்ந்து தனது காதலி நிவேதாவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது, ‘வாட்ஸ் அப்’பில் படங்கள் அனுப்புவது என காதலை வளர்த்து வந்துள்ளார். தங்கையின் போனில் தொடர்ந்து மெஸேஜ்களும், படங்களும் வருவதைப் பார்த்து ஆத்திரமடைந்த வினோத், நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்த சத்தியநாராயணனை  பசுமடம் நாகம்மாள் கோவில் அருகில் இருட்டான பகுதியில் வைத்து வழிமறித்தார். 
வினோத் தன் நண்பர்களுடன் வழி மறித்து, தனது தங்கையுடனான காதலை விட்டுவிடும்படி சத்தியநாராயணனை எச்சரித்தும் சத்தியநாராயணன், காதலைக் கைவிட சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. 

beer bottle

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியது. குடிபோதையில் ஆத்திரத்தில் இருந்த வினோத், பீர்பாட்டிலால் சத்தியநாராயணனின் தலையில் தாக்கினார். இதில் சத்தியநாராயணன் அலறினார். இரவு 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. சத்தியநாராயணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள்  திரண்டனர். பொதுமக்கள் திரள்வதைப் பார்த்த வினோத், உடனடியாக சத்திய நாராயணனின் வயிற்றில் பாட்டிலால் குத்திவிட்டு நண்பர்களுடன் தப்பியோடி விட்டார். 

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சத்திய நாராயணனை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சத்தியநாராயணன் பரிதாபமாக இறந்தார். பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களைத் தேடி  வருகின்றனர்.

murder

கொலை செய்யப்பட்ட சத்தியநாராயணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து, அண்ணா ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள பிரபல ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தார்.  இந்நிலையில் தான் தன் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த வினோத்தின் தங்கையை காதலிக்க தொடங்கியுள்ளார்.