திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கருட சேவை!

 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கருட சேவை!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான நேற்று பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். 

திருப்பதி:

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி  கொடி ஏற்றத்துடன் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது.

thiruchanur

பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் பத்மாவதி தாயார் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று மாலை தங்க ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் தங்கரதம் உலா வந்தது. அதனை தொடர்ந்து இரவு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர்.

garuda sevai

 மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி எடுத்து தாயாரை வழிபாடு செய்தனர். அதனையடுத்து இன்று காலை சூரிய பிரபை வாகனத்திலும் இரவு சந்திர பிரபை வாகனத்திலும் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேலும் கோயில் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய படி வீதி உலாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆந்திரா,தெலங்கானா,தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் விழாவினை கண்டு களித்தனர்.

பிரம்மோற்சவ விழாவில் நாளை திருத்தேர் மற்றும் குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறார்.அதன் பின்னர் புதன்கிழமை சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.