திரிஷாவுக்காக இயக்குநர் பணியை கைவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!?

 

திரிஷாவுக்காக இயக்குநர் பணியை கைவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!?

சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். அப்படத்தையடுத்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் சில காலமாக படம் எதுவும் இயக்காமல் ஓய்வில் இருந்தார்.

saravanan

ஏனென்றால் ஒரு விபத்தின் காரணமாக சில காலம்  சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது உடல் நிலை சரியானதையடுத்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். 

trisha

திரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத்தவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குநர் சரவணன், ஏ.ஆர்.முருகதாஸிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் யோகி பாபுவின் புதிய அவதாரம் என்ன தெரியுமா?