திரில்லர் படத்தில் திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குநர்!

 

திரில்லர் படத்தில் திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குநர்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘k13’ என்ற திரில்லர் படத்தில் நடித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘k13’ என்ற திரில்லர் படத்தில் நடித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துவரும் த்ரில்லர் படம் ‘கே 13’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இதில் யோகி பாபு, ரமேஷ் திலக், எருமை சாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

adhik

இந்நிலையில் திரில்லர் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அதைத்தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பரத் நீலகண்டன் கூறுகையில், ‘ஸ்கிரிப்ட் முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரைத் தேடிக்கொண்டிருந்தேன். தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன்.

அவர் நடிக்கும் காட்சிகளில் நடிகை காயத்ரியும் இருந்தார், இருவருமே மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். அனுபவம் வாய்ந்த இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் வேலைவாங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. 

aadik

ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களைப் பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.