திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால் தேர்தலை தள்ளிபோடுகிறார்கள்: மு.க.ஸ்டாலின்

 

திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால் தேர்தலை தள்ளிபோடுகிறார்கள்: மு.க.ஸ்டாலின்

திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோடுகிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர்: திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோடுகிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,திமுக சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். கிராமங்கள்தான் கோவில். நான் பக்தனாக இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் உங்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு அதனை விரைவில் தீர்த்து வைக்க உறுதியோடு வந்திருக்கிறோம்.

நான் எனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களை சந்தித்து வருகிறேன். சீவூர் ஊராட்சியில் உள்ள இந்த குடியாத்தம் தொகுதி, எம்.எல்.ஏ. இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது. அ.தி.மு.க.வின் பங்காளி சண்டையால் எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியை பற்றி பேச 1 வருடமாக எம்.எல்.ஏ. இல்லை.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. வருகிற ஏப்ரல், மே மாதம் நிச்சயம் வந்துவிடும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருமோ என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதில் திமுக வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிபோட்டு வருகிறார்கள் என்றார்.