திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி!

 

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி!

நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொருளாளர்  துரைமுருகன்  வீடு திரும்பியுள்ளார்.

சென்னை: நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொருளாளர்  துரைமுருகன்  வீடு திரும்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நேற்று முன்தினம்  தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வருகிற 8-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று  இரண்டாவது நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பேசிய துரைமுருகன், ‘நான் 2007-ல் மடிந்திருந்தால் என் உடல் மீது கலைஞரின் கண்ணீர் விழுந்திருக்கும். எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. என் மரணத்திற்குக் கலைஞர் கண்ணீர் விடுவார் என நினைத்தேன், ஆனால் அவர் மரணத்திற்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது’ என்று கண்ணீர் மல்க பேசினார்.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  நெஞ்சுவலி காரணமாக இன்று அதிகாலை  அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை முடிந்து அவர் வீடு திருப்பியுள்ளார்.