திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

 

திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். 

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். 

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்பதால், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. 

இதற்கிடையே, இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அந்த அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வருகின்ற ஜனவரி 23-ம் தேதியன்று திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நடத்துகின்றனர். அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். 

அந்த வகையில், மாநாட்டில் பங்கேற்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, விசிக மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.