திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்!

 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்!

தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராக சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராக சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்குகளை தொடுத்தது. அண்மையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விமர்சித்ததாகவும் ஸ்டாலின் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

stalin 

தமிழக அரசு தொடர்ந்த இந்த மூன்று அவதூறு வழக்குகளை விசாரித்த, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு வழக்குகளில் பிப்ரவரி 24ஆம் தேதியும், சிஏஏ தொடர்பான வழக்கில் மார்ச் 4ஆம் தேதியும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.