திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம் !

 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம் !

போராட்டத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தோழமை கட்சிகளும் கலந்து கொண்டன. அந்த போராட்டத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே உள்ளாட்சி தேர்தல் வந்து விட்டதால் அனைத்து கட்சிகளும்  குடியுரிமை சட்டத்திருத்ததை விட்டு, தேர்தல் பணியில் தீவிரம் காட்டின. 

ttn

தற்போது தேர்தல் முடிவடைந்ததால் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக ஆலோசிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் போராட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.