‘திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது’.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி !

 

‘திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது’.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி !

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளாதது இன்னும் பெரும் பிளவாகப் பார்க்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை, அக்கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளாதது இன்னும் பெரும் பிளவாகப் பார்க்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், சோனியா காந்தியைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி கூட்டணிக் கட்சிகளிடையே எந்த பிரிவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

ttn

இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, திமுக- காங்கிரஸ் கூட்டணிகளுக்கிடையே விரிசல் என்று யார் சொன்னது. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே விரிசல் ஏதும் இல்லை. நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், ஸ்டாலினுக்குப் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக வந்தேன் என்றும் தெரிவித்தார்.