‘திமுக ஒரு திருட்டு கட்சி..மக்களைத் தூண்டி விட்டுக் குளிர்காயும் கட்சி’ : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் !

 

‘திமுக ஒரு திருட்டு கட்சி..மக்களைத் தூண்டி விட்டுக் குளிர்காயும் கட்சி’ : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் !

அதிமுகவை வீழ்த்தலாம் என்று எண்ணும் எதிர்க்கட்சிக்குத் தோல்வி மட்டுமே கிட்டும். அதிமுகவை வீழ்த்துவதற்கு இந்த உலகில் புதியதாக ஒருவன் பிறந்து தான் வரவேண்டும்.

விருதுநகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி, ‘எம்.ஜி.ஆருக்கு 103 வயது ஆகி விட்டது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். எப்போதும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து, இறக்கும் வரை மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருந்தார். அவர் உருவாக்கிய அதிமுகவை வீழ்த்தலாம் என்று எண்ணும் எதிர்க்கட்சிக்குத் தோல்வி மட்டுமே கிட்டும். அதிமுகவை வீழ்த்துவதற்கு இந்த உலகில் புதியதாக ஒருவன் பிறந்து தான் வரவேண்டும். அனைத்து பிரச்னைகளையும் மக்களிடம் தூண்டி விட்டுக் குளிர் காயும் கட்சி தான் திமுக. அது அதிமுகவை ஜெயிக்க நினைத்தால் ஒரு போதும் நடக்காது’ என்று கூறினார். 

ttn

அதனைத்தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் தவறு செய்தால் 5 வருஷத்துக்கு திமுகவிடம் கேள்வி கேட்க முடியாது. ஏதோ போனால் போகிறது என்று தான் உள்ளாட்சித் தேர்தலில் அடங்கிப் போனோம். அதனால் தான் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், மறைமுக தேர்தலில் அதிமுக தான் அதிக இடங்களைக் கைப்பற்றியது. திமுக ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி” என்று தெரிவித்தார்.