திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு : முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

 

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு : முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை அதிமுக அரசு ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து கொண்டார். செந்தில் பாலாஜி இப்போது திமுக எம்.எல்.ஏ வாக இருந்து வருகிறார். இவர் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

ttn

அந்த புகாரின் பேரில் நேற்று கரூர் டிஎஸ்பி தலைமையிலான 15 பேர் கொண்ட குழு செந்தில் பாலாஜி வீட்டில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தங்க நகைகள், வாகனங்கள் மற்றும் கார், சொத்து உள்ளிட்டவற்றின் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின் அவரது வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். இது குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, ‘அரசியலில் பழிவாங்கும் நோக்கோடு தான் இவை அனைத்தும் நடக்கின்றன, இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று தெரிவித்தார். அவருக்கு எதிரான ஆதாரங்கள் உறுதியாக இருப்பதால் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். 

ttn

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியும் தேவை படும் போது  மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், அவரது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்  தினமும்  காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.