திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும்: தலைமை கழகம் அறிவிப்பு!

 

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும்: தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை வருகிற 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

ops

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும் மாலை ஸ்டாலினை திமுக எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளனர். எம்.எல்.ஏக்களில் பலர் திமுக மாவட்ட செயலாளராகவும் பலர் உள்ளனர். இதனால் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

dmk

முன்னதாக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.