திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு பெட்டி பெட்டியாய் கொடுத்த எடப்பாடி … மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் வாங்கி அம்பலமானதால் அதிர்ச்சி..!

 

திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு பெட்டி பெட்டியாய் கொடுத்த எடப்பாடி … மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் வாங்கி அம்பலமானதால் அதிர்ச்சி..!

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது சபைக்கு வரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அன்றன்றைக்கு நடந்த மானிய கோரிக்கை தொடர்பான துறை சார்பாக மதிய சாப்பாடுக்கு பிரியாணி, சூட்கேஸ் என பரிசு பொருட்களை அள்ளி வீசியது அதிமுக. ஆனால் அதையெல்லாம் வாங்கக் கூடாது’ என தி.மு.க., 

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது சபைக்கு வரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அன்றன்றைக்கு நடந்த மானிய கோரிக்கை தொடர்பான துறை சார்பாக மதிய சாப்பாடுக்கு பிரியாணி, சூட்கேஸ் என பரிசு பொருட்களை அள்ளி வீசியது அதிமுக. ஆனால் அதையெல்லாம் வாங்கக் கூடாது’ என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவு போட்டு விட்டார்.

box

உடனே வடசென்னை பகுதி திமுக புள்ளியான சேகர் பாபு, ‘மதிய சாப்பாட்டு செலவை நம்ம எம்.எல்.ஏக்களுக்கு நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஸ்டாலினிடம் ஜம்பமாக சொல்லிட்டார். சட்டசபை நடக்கும் போது தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், உதவியாளர்கள் என 150 பேருக்கும் மட்டன், சிக்கன் என வகை வகையாக சாப்பாடு கொடுத்தார்கள்.

box

ஆனால் சாப்பாட்டுக்கு சேகர் பாபு ஒரு பைசாவைக் கூட நகற்றவில்லையாம். அந்தப் பொறுப்பை, மாவட்ட விவசாய அணியை சேர்ந்த ஒருத்தர் தலையில் கட்டி விட்டார் சேகர் பாபு. பாவம் அவர், தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சட்டசபை நடக்கும் போதெல்லாம் தினமும் 40 ஆயிரம் ரூபாய் கைக்காசை செலவழித்து உணவு தயார் செய்து கொடுத்திருக்கிறார். இது தெரியாமல் தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபுவை புகழ்ந்து தள்ளி வ் வருகிறார்கள்.