திமுக எம்.எல்.ஏக்களை வளைத்த அதிமுக… மு.க.ஸ்டாலினின் அடிமடியில் கைவைத்த எடப்பாடி..!

 

திமுக எம்.எல்.ஏக்களை வளைத்த அதிமுக… மு.க.ஸ்டாலினின் அடிமடியில் கைவைத்த எடப்பாடி..!

திமுக நமது ஆட்சியை கலைக்க போவதாக கிளப்பிவிடுதே தவிர நம்ம ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது’’ எனக் கூறினாராம். இதை கேட்ட எம்.எம்.ஏ.க்கள் எடப்பாடியின் சாதுர்யத்தை கண்டு ஆடிப்போய் விட்டார்களாம்.

ஆட்சியை கலைக்க எத்தனையோ அஸ்திரங்களை ஏவினாலும் அவற்றை லாவகமாய் திருப்பி விட்டு தேர்ந்த அரசியல்வாதி ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. டி.டி.வி.தினகரன் பின்னால் போன எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார். தனக்கு எதிராக பெரும் கூச்சல் போட்ட கருணாஸையே வலைத்தவராயிற்றே… இப்படி அதிமுக எம்.எல்.ஏக்களை மட்டுமல்ல… அனைத்து எம்.எல்.ஏக்களையும் தனது கருணைப்பார்வையால் கட்டிப்போட்டு வைத்துளார் எடப்பாடி.EPS

சட்டப்பேரவையில் தினமும் ஒரு சூட்கேஸ் கொடுத்தே தனது சூட்சமத்தை நாசுக்காக திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கும் உணர்த்தி விட்டார். அதன் அடுத்த கட்டமாக தற்போது திமுக எம்எல்ஏக்கள் சிலரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். திமுக தரப்பில் நமது எம்எல்ஏக்கள் சிலரை வளைத்து சொல்கிறார்கள் என எடப்பாடியிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.

ops

அதற்கு கூலாக பதில் சொன்ன எடப்பாடி, ’பதற்றப்படாதீங்க. நம்ம கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமில்ல, திமுக எம்எல்ஏக்களும் ஆட்சி 2021 வரைக்கும் தொடர்வதைதான் விரும்புறாங்க. நம்ம கட்சி எம்எல்ஏக்களுக்கு வலை வீசுறதா திமுக தரப்பில் சொல்வதெல்லாம் வெற்றுப்பொய். உண்மையை சொல்லப்போனால், திமுக எம்எல்ஏக்கள் சிலரே நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்காங்க. அவங்களுக்கு என்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடுத்தாச்சு. stalin

ஆகையால் மு.க.ஸ்டாலினால் அசைக்கக்கூட முடியாது. திமுக நமது ஆட்சியை கலைக்க போவதாக கிளப்பிவிடுதே தவிர நம்ம ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது’’ எனக் கூறினாராம். இதை கேட்ட எம்.எம்.ஏ.க்கள் எடப்பாடியின் சாதுர்யத்தை கண்டு ஆடிப்போய் விட்டார்களாம்.