திமுக எம்பி கனிமொழி மனு தள்ளுபடி!

 

திமுக எம்பி கனிமொழி மனு தள்ளுபடி!

தமிழகத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்ப்பில் தமிழிசையும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் நடைப்பெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிப் பெற்றார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்ப்பில் தமிழிசையும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் நடைப்பெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிப் பெற்றார். கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தமிழிசை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

kani and tamil

இந்நிலையில், சமீபத்தில் பாஜகவின் தமிழக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள தமிழிசை தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கபட்டிருப்பதால் தமிழிசையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கனிமொழி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கனிமொழி எம்பி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தமிழிசை தொடுத்திருக்கும் வழக்கை வேறு ஒருவர் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.