திமுக ஊராட்சி சபை கூட்டம்; திருவாரூரில் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

 

திமுக ஊராட்சி சபை கூட்டம்; திருவாரூரில் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

திமுக ஊராட்சி சபை கூட்டம் இன்று தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை திருவாரூரில் தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக ஊராட்சி சபை கூட்டம் இன்று தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை திருவாரூரில் தொடங்கி வைத்தார்.

திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றதால், தேதி மாற்றப்பட்டது. அதன்படி, “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

திருவாரூர் அருகே புலிவலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார். வருகிற பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் திமுக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான மக்கள் விரோத அ.தி.மு.க – பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் #திமுகஊராட்சிசபை இன்று தொடங்குகிறது. மக்களிடம் செல்வோம்! மக்களிடம் சொல்வோம்! மக்கள் மனங்களை வெல்வோம்!” என பதிவிட்டுள்ளார்.