திமுகவை தலைதூக்க விடமாட்டார்கள்.. அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுகவை தலைதூக்க விடமாட்டார்கள்.. அமைச்சர் ஜெயக்குமார்

தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

திமுகவை தலைதூக்க விடமாட்டார்கள்.. அமைச்சர் ஜெயக்குமார்

அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவின் நிலைப்பாடு குறித்தும், ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’திமுக ஒரு நரகாசுர இயக்கம். அதனால் திமுகவை மக்கள் தலைதூக்க விடமாட்டார்கள்’’என்றார். நரகாசுரனை அழித்ததை மக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்ற நாளில் அவர் இந்த பதில சொன்னார்.

மேலும்,’’வரும் தேர்தலில் மக்கள் நரகாசூர கட்சியை வீழ்த்திவிடுவார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிதான் மலரும்’’என்று தெரிவித்தார்.