திமுகவுக்காக ஊர் ஊராக பிரசாரம் செய்வேன்: வைகோ அதிரடி

 

திமுகவுக்காக ஊர் ஊராக பிரசாரம் செய்வேன்: வைகோ அதிரடி

திமுகவுக்காக நான் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை: திமுகவுக்காக நான் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திருவாரூர் தொகுதி காலியாக இருந்தது. இதனால் திருவாரூருக்கு எப்போது தேர்தல் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும்,10-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதி கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், திருவாரூரில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உறுதியாக பாடுபடும். திமுக மகத்தான வெற்றி பெரும். நான் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வேன். மதிமுக என்பது நிராகரிக்க முடியாத, உதாசினப்படுத்த முடியாத பெரும் அரசியல் சக்தியாக 2019ல் நிற்போம் என்றார்.