திமுகவில் ஈகோ யுத்தம்… திணறடிக்கும் டி.ஆர்.பாலு..!

 

திமுகவில் ஈகோ யுத்தம்… திணறடிக்கும் டி.ஆர்.பாலு..!

அன்பரசன் தடுத்து நிறுத்தவில்லை என்பதும் டி.ஆர்.பாலுவின் கோபம். தேர்தல் முடிந்தும் இருவருக்குமான ‘ஈகோ’ மோதல் தொடர்ந்து வருகிறது.

திமுகவில் எம்.பி.,க்கும், மாவட்ட செயலாளருக்கும் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம்  மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு. இவர், தேர்தலுக்கு முன்பு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரான அன்பரசனிடம் ‘’எனக்கு சீட் தரணும்னு, நாலு பேரை விட்டு, அறிவாலயத்துல பணம் கட்டுங்க… அந்தப் பணத்தை நான் தந்து விடுகிறேன்’’ என கேட்டிருக்கிறார். ஸ்டாலின்

இதைக் கேட்ட அன்பரசன், ‘எங்கிட்ட இல்லாத பணமா… இவர் தந்து தான், நான் கட்டணுமா’ என அப்போதே தனது ஆதரவாளர்களிடம் புலம்பியிருக்கிறார். இது டி.ஆர்.பாலு காதுக்கும் சென்று விட்டது.  அதே நேரம் ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு சீட் கேட்டு, படப்பையை சேர்ந்த  மனோகரனும், அறிவாலயத்தில் பணம் கட்டியிருந்தார்.

 பாலு

அவரை, அன்பரசன் தடுத்து நிறுத்தவில்லை என்பதும் டி.ஆர்.பாலுவின் கோபம். தேர்தல் முடிந்தும் இருவருக்குமான  ‘ஈகோ’ மோதல் தொடர்ந்து வருகிறது.