திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல் !

 

திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல் !

அக்கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் நடந்து கொண்டதால் அவரை மறைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இலக்கியவாதி பழ.கருப்பையா, அக்கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் நடந்து கொண்டதால் அவரை மறைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பிறகு, இவர் திமுகவில் இணைந்து கொண்டார். 

ttn

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா தற்போது திமுகவில் இருந்தும் விலகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கார்ப்பரேட் நிறுவனம் திமுக நடத்தப்படும் விதம் திமுக மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதனால் ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்து விட்டு அக்கட்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.