திமுகவிலிருந்து அழகிரியைப் போல் கனிமொழியும் ஒதுக்கப்பட்டார்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

 

திமுகவிலிருந்து அழகிரியைப் போல் கனிமொழியும் ஒதுக்கப்பட்டார்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

மதுரையில் தனியார் பங்களிப்புடன் ரூபாய் 70. இலட்சம் மதிப்பீட்டில், மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் “ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீருற்று நிகழ்ச்சியினை” தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

திமுகவிலிருந்து அழகிரியைப் போல் கனிமொழியும் ஒதுக்கப்பட்டார்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

மதுரையில் தனியார் பங்களிப்புடன் ரூபாய் 70. இலட்சம் மதிப்பீட்டில், மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் “ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீருற்று நிகழ்ச்சியினை” தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது. இப்போதவாது கனிமொழியை பேச அனுமதித்துள்ளார்கள். ஆனாலும் கனிமொழி பார்த்து நடந்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கட்சியில் இருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். மயிரிழையில் உயிர் தப்பியது போன்று என்ற பழமொழியைப் போல் வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வேலூரில் திமுகவினர் வெற்றிப் பெற்றுள்ளனர். அழகிரியை போல கனிமொழியையும் திமுகவிலிருந்து ஒதுக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.