திமுகவால்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது- முதலமைச்சர் பழனிசாமி

 

திமுகவால்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது- முதலமைச்சர் பழனிசாமி

திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

வேலூர் மக்களவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  “
திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி… நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர். முதல்வர் நாற்காலி மீது மு.க.ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. ஆனால் வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பார்கள். இருக்கின்ற இடத்தில்தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவர்கள். வேலூரில் தேர்தலை நிறுத்த வேண்டும் என நாங்கள் முயற்சிக்கவில்லை. வேலூரில் திமுகவினர் பதுக்கி வைத்திருந்த பணம் பிடிபட்டதால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது” என கூறினார்.