தினம் ஒரு விருதுகளை அள்ளிக்குவிக்கும் ஓபிஎஸ்! இன்று “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருது!!

 

தினம் ஒரு விருதுகளை அள்ளிக்குவிக்கும் ஓபிஎஸ்! இன்று “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருது!!

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

OPS

ஓபிஎஸுடன் அவருடைய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் ,  சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக “தங்கத் தமிழ் மகன்” விருது வழங்கப்பட்டது. இதையடுத்து சிகாகோவில் நடைபெற்ற உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு “சர்வதேச வளரும் நட்சத்திரம் விருது” வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காந்தியடிகளின் பெயரிலானா “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருது வழங்கப்பட்டது. 

OPS- TTN

விருது பெற்றது குறித்து மனம் திறந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “அன்பு, அகிம்சையால் வெல்ல முடியாதது ஏதுமில்லை என்பதை போதித்து வாழ்ந்து காட்டிய அண்ணல் காந்தியடிகளின் பெயரிலான “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருது பெறுவதில் மனம் மகிழ்கிறேன். இவ்விருதினை தமிழக மக்கள் அனைவருக்கும் பணிவன்போடு சமர்ப்பிக்கிறேன். அமெரிக்காவில் எனக்கு வழங்கிய விருதை தமிழக மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்தார்.