தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

 

தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

‘ஆன் ஆப்பிள் ஏ டே கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பதெல்லாம் பழைய காலம். பழமொழிகளின் மேல் தவறு கிடையாது. உண்மையில் தினம் ஆப்பிள் சாப்பிட்டால் நல்லது தான். ஆனால், பருவம் தப்பியும் கிடைக்கும் ஆப்பிள்கள் எங்கிருந்து, எப்போது பறித்து, எத்தனை ரசாயனங்களைக் கடந்து வருகிறது என்று தெரியாத நிலையில், ஆப்பிளின் விலை உயரத்திற்கு எல்லாம் ஈடு கொடுத்து கட்டுப்படியாகாது. 

தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

‘ஆன் ஆப்பிள் ஏ டே கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பதெல்லாம் பழைய காலம். பழமொழிகளின் மேல் தவறு கிடையாது. உண்மையில் தினம் ஆப்பிள் சாப்பிட்டால் நல்லது தான். ஆனால், பருவம் தப்பியும் கிடைக்கும் ஆப்பிள்கள் எங்கிருந்து, எப்போது பறித்து, எத்தனை ரசாயனங்களைக் கடந்து வருகிறது என்று தெரியாத நிலையில், ஆப்பிளின் விலை உயரத்திற்கு எல்லாம் ஈடு கொடுத்து கட்டுப்படியாகாது. 

தினமும் குழந்தைகளுக்கு ஒரு செவ்வாழைப்பழத்தைக் கொடுத்து வாருங்கள். வாழைப்பழத்தின் எல்லா ரகத்திலுமே அபரிமிதமான சத்துக்கள் உள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய பழமாகவும் இருக்கிறது. செவ்வாழையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன. பீட்டா கரோட்டீன்,  தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும்  காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.  பல்வலி, பல் அசைவு போன்ற உபாதைகளையும் செவ்வாழைப்பழம் விரைவில் குணப்படுத்தும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால், தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம். சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். கண்களின்

banana

ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நீரிழிவு  நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும்.  செவ்வாழை பழத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் உட்கொண்டு வர, சரும நோய், விரைவில் குணமாகும். எப்போதும் சோம்பலாய்  இருப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த மருந்தாகும். தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது சிறுநீரகப் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்  கொள்ள உதவும்.