தினமும் தலையில் பூ வைப்பதால் இத்தனை நன்மைகளா? 

 

தினமும் தலையில் பூ வைப்பதால் இத்தனை நன்மைகளா? 

பெண்கள் அழகுக்காகவும், வாசனைக்காகவும் மட்டும் தான் தினமும் தலையில் பூ வைத்துக் கொள்கிறார்கள் என்று இனிமேல் நினைக்காதீர்கள். தலையில் தினமும் பூ சூடிக் கொள்வதால், ஆரோக்கியமும் மேம்படுகிறது. தலையில் நீர் கோர்த்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது. ஒவ்வொரு பூக்களையுமே சூடிக் கொள்வதற்கான கால அளவுகள் இருக்கின்றன.

தினமும் தலையில் பூ வைப்பதால் இத்தனை நன்மைகளா? 

பெண்கள் அழகுக்காகவும், வாசனைக்காகவும் மட்டும் தான் தினமும் தலையில் பூ வைத்துக் கொள்கிறார்கள் என்று இனிமேல் நினைக்காதீர்கள். தலையில் தினமும் பூ சூடிக் கொள்வதால், ஆரோக்கியமும் மேம்படுகிறது. தலையில் நீர் கோர்த்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது. ஒவ்வொரு பூக்களையுமே சூடிக் கொள்வதற்கான கால அளவுகள் இருக்கின்றன.

women

பூக்களைச் சூடும் கால அளவு
முல்லைப்பூ – 18 மணி நேரம்
அல்லிப்பூ – 3 நாள்கள் வரை
தாழம்பூ – 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ – 12 மணி நேரம்
செண்பகப்பூ – 15 நாள்கள் வரை
சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்
மகிழம் பூ மற்றும் குருக்கத்திப் பூவை நாம் சாப்பிடும் போது மட்டும் தான் சூடிக் கொள்ள வேண்டும்.
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ போன்றவைகளை அந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

இனி தலையில் பூக்களைச் சூடிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.