தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க… நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது!

 

தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க… நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது!

எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்கு தான், இன்று பெரும்பான்மையான தமிழக மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். தெருவிற்கு நான்கைந்து மருத்துவமனைகள் திடீர் திடீரென முளைத்து காசு பார்த்து வருகின்றன

தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க… நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது!

எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்கு தான், இன்று பெரும்பான்மையான தமிழக மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். தெருவிற்கு நான்கைந்து மருத்துவமனைகள் திடீர் திடீரென முளைத்து காசு பார்த்து வருகின்றன. 

சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதனால் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. 
அந்த வரிசையில் 26 விதமான நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகையைப் பற்றித் தான் நாம் படிக்கப் போகிறோம்.
இந்த அதிசய மூலிகையால் குணமாகும் நோய்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்.
1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்கள்
11. ஆசனப்புண்கள்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம்
21. ரத்த பேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்தை பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். உணவே மருந்தாகவும் சித்த வைத்தியத்தில் இருப்பதால் நோய் வரும் முன்பே உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி, அதனுள் இருக்கும் பருப்பை நீக்கி விட்டு, அதன் பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப் பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட 26நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.