தினகரன் கட்சி கானல் நீராகி காணாமல் போகும் – ஓ.எஸ்.மணியன்

 

தினகரன் கட்சி கானல் நீராகி காணாமல் போகும் – ஓ.எஸ்.மணியன்

தினகரனின் அமமுக கட்சி கானல் நீராகி காணாமல் போகும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

கோவை: தினகரனின் அமமுக கட்சி கானல் நீராகி காணாமல் போகும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அது தொடர்பாக நிலுவையில் இருந்த தீர்ப்பு நேற்று வெளியாகியது.

தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தினகரனுடன் ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தினகரன் தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன் என்று சொன்னால்தான் அமமுகவில் 4 பேராவது இருப்பார்கள் என்பதற்காகவே தினகரன் அவ்வாறு கூறுகிறார்.

அவரின் கட்சி இன்னும் சில நாட்களில் காணாமல் போகும்” என தெரிவித்துள்ளார்.