தினகரன் ஒரு பொருட்டே இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

 

தினகரன் ஒரு பொருட்டே இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

திருவாரூர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக ஒரு பொருட்டே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: திருவாரூர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக ஒரு பொருட்டே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கலில் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றிருந்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், திருவாரூர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக ஒரு பொருட்டே இல்லை என்றும், திமுக அதிமுகவிற்கு இடையே தான் போட்டி என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக இன்னும் தங்களின் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.