தினகரனுக்கு இன்னும் நிறைய அனுபவங்கள் காத்திருக்கிறது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 

தினகரனுக்கு இன்னும் நிறைய அனுபவங்கள் காத்திருக்கிறது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு டிடிவி தினகரனுக்கு அனுபவம் என்றால் அவருக்கு இன்னும் நிறைய அனுபவங்கள் காத்திருக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூர்: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு டிடிவி தினகரனுக்கு அனுபவம் என்றால் அவருக்கு இன்னும் நிறைய அனுபவங்கள் காத்திருக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தினகரனும், அவருடன் இருக்கும் எம்.எல்.ஏக்களும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். ஆனால் தினகரன் எப்போதும் போல் கூலாகவே செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். நேற்று தீர்ப்பு வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது எங்களுக்கு ஒரு அனுபவம் என்றார். இதற்கிடையே தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததால் ஈபிஎஸ்ஸூம், அமைச்சர்களும் தினகரனை விமர்சித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.

ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டிடிவி தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம், அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது என்றார்.