திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு சாலையை மறித்த மக்கள்: தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

 

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு சாலையை மறித்த மக்கள்: தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக் குடங்களுடன் 200 பேர் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். 

தமிழகத்தில் மழைக் காலம் துவங்கிய போதிலும் பல இடங்களில் தண்ணீர் பற்றாக் குறை நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திர பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப் படாததால் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பண்ணப்பட்டி மக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து ஒட்டன் சத்திரம், செத்தப்பட்டியைச் சேர்ந்த 200 பேர் சாலையை மறித்தனர். இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக செம்பட்டி-பழனி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.