திண்டுக்கலில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 5 பேர் உயிரிழப்பு

 

திண்டுக்கலில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 5 பேர் உயிரிழப்பு

கொடைரோடு சுங்கச்சாவடி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்: கொடைரோடு சுங்கச்சாவடி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொடைரோடு சுங்கச்சாவடி அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி சென்ற காரும், மதுரை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய ஒரு கார் சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இவ்விரு கார்களும் அப்பளம்போல நொறுங்கின.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் சிக்கிய கார்களை கிரேன் மூலம் அகற்றும் பணிகள் நடந்தன. அப்போது கிரேனின் செயின் அறுந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஒருவர் தலையில் விழுந்தது. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த போலீஸ் நபருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.