திட்டிய ஆசிரியர் ; அடிக்க வந்த மாணவன் – கடைசியில் அடி வாங்கியது யார்னு பாருங்க

 

திட்டிய ஆசிரியர் ; அடிக்க வந்த மாணவன் – கடைசியில் அடி வாங்கியது யார்னு பாருங்க

திட்டிய ஆசிரியரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்க வந்த மாணவனை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் :

திட்டிய ஆசிரியரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்க வந்த மாணவனை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானின் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகதீஸ்பிரசாத் ஜாமர்மால் திப்ரிவாலா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆனந்த் என்ற மாணவனை, இரு தினங்களுக்கு முன்பு பேராசிரியர் ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த மாணவன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பேராசிரியரை தாக்குவதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கிருந்த கம்பால் இளைஞர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனைக் கண்ட மாணவன் ஆனந்த் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடன் வந்த நண்பர்கள் அமன், சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேராசிரியர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.