திட்டமிட்டபடி மழைக்கால கூட்டத்தொடர் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

 

திட்டமிட்டபடி மழைக்கால கூட்டத்தொடர் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 47-நாளை கடந்துள்ள போதிலும் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவில் ஜுன், ஜூலை மாதங்களில் தான் உச்சத்தை எட்டும் கூறப்படுகிறது. 

om brilla

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில், ஏற்கெனவே முடிவு செய்தபடி திட்டமிட்ட தேதியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட்டப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். அதே நேரம் அப்போதைய நிலவரப்படி, கூட்டத் தொடரை ஒத்திவைப்பதா? தொடர்வதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.