திடீர் திருப்பம்! வேலூரில் திமுக முன்னிலை!

 

திடீர் திருப்பம்! வேலூரில் திமுக முன்னிலை!

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன

திடீர் திருப்பம்! வேலூரில் திமுக முன்னிலை!

வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்துவருகிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்புக் காவல்படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 500 காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ‌வாக்கு எண்ணும் மையத்தில் 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

kathir

திமுகவின் கதிர் ஆனந்த் 7507 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார். தொடர்ந்து முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 
பின்னடைவு அடைந்தார்.