திடீரென வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்கள்.. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்!

 

திடீரென வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்கள்.. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அந்த வாகனம் அலசனத்தம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, வாகனத்தால் இருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளனர். 

ttn

இந்த தீ விபத்தில் அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளன. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது, உயிர்ச் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.