திடீரென விமானத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி: என்ன நடந்தது தெரியுமா?

 

திடீரென விமானத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி: என்ன நடந்தது தெரியுமா?

துபாயில் இருந்து லக்னோவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ: துபாயில் இருந்து லக்னோவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து  நேற்று உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென தனது ஆடைகளைக் களைந்த பயணி ஒருவர், விமானத்தின் உள்ளே நிர்வாணமாக ஓடினார்.
 
இதனால், விமான ஊழியர்களும் மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.  உடனே, அங்கிருந்த பணியாளர் ஒருவர் மற்றொரு பயணியிடமிருந்து  போர்வையை எடுத்து நிர்வாண ஆசாமி மீது மூடி, இருக்கையில் அமர வைத்தார்.

இதையடுத்து விமானம் லக்னோ நகரை அடைந்ததும், அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும், அந்த பயணி குறித்தான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.