திடீரென மாயமான தமிழ் பட நாயகி! பின்னணி என்ன? 

 

திடீரென மாயமான தமிழ் பட நாயகி! பின்னணி என்ன? 

தொரட்டி பட நாயகி திடீரென மயமானதையடுத்து அவரை நேரில் ஆஜர் படுத்தக்கோரித் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை: தொரட்டி பட நாயகி திடீரென மயமானதையடுத்து அவரை நேரில் ஆஜர் படுத்தக்கோரித் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஷாமன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘தொரட்டி’. இதில் சத்தியகலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென கதாநாயகி  மாயமானார். இது தொடர்பாகப் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சத்திய கலாவை அவரது பெற்றோர்கள் கடத்திவிட்டதாகப்  பட தயாரிப்பு நிறுவனம் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘சினிமாவில் நடிப்பது தன்னுடைய தந்தை மற்றும் இரண்டாவது தாய்க்குப் பிடிக்காததால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகப் படக்குழுவினரிடம் சத்தியகலா பல முறை புலம்பியுள்ளதாகத்  தெரிவித்திருந்தார். மேலும் சென்னையில் சத்தியகலா வசித்து வந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை. அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை தொடர்புகொள்ள முடியாத சூழ் நிலைய உருவாகியுள்ளது. எனவே குடும்பத்தினரால் கடத்தப்பட்ட சத்திய கலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

sitiyakala

மேலும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் கருணாகரன் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.