திடீரென மர்மமாக பற்றி எரிந்த கார்.. இந்து முன்னணி கட்சி செயலாளருக்கு வைக்கப்பட்ட குறியா?: போலீசார் தீவிர விசாரணை!

 

திடீரென மர்மமாக  பற்றி எரிந்த கார்..  இந்து முன்னணி கட்சி செயலாளருக்கு வைக்கப்பட்ட குறியா?: போலீசார் தீவிர விசாரணை!

இவர் வழக்கமாகத் தனது காரை வீட்டிற்கு வெளியே தான் நிறுத்துவாராம். அதே போல நேற்று இரவும் காரை வெளியே விட்டுச் சென்றுள்ளார்.

திருப்பூர் கொங்குப் பகுதியில்  வசித்து வருபவர் மோகன். இவர் இந்து முன்னணியின் கோட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாகத் தனது காரை வீட்டிற்கு வெளியே தான் நிறுத்துவாராம். அதே போல நேற்று இரவும் காரை வெளியே விட்டுச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். 

ttn

விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நின்று கொண்டிருந்த கார் மீது எப்படி தீ பிடிக்கும்? யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது தானாக கார் எறிந்ததா என்றும் அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர். இது  இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் கோபிநாத்துக்கு வைக்கப் பட்ட குறியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.