திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா! ஜாமீன் கிடைக்காத சோகம்!

 

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா! ஜாமீன் கிடைக்காத சோகம்!

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் கைதாகி, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் சந்தித்தனர்.  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் கைதாகி, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் சந்தித்தனர்.

car

 சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. பல முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும், தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவது ப.சிதம்பரத்தின் உறவினர்களையும், காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

rahul and priyanka

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், திகார் சிறையில் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.