தாலியை கழற்றி வைத்து விட்டு காதலனுடன் ஓடிய பெண்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதீங்க என்று போலீஸுக்கு அட்வைஸ்!

 

தாலியை கழற்றி வைத்து விட்டு காதலனுடன்  ஓடிய பெண்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதீங்க என்று போலீஸுக்கு  அட்வைஸ்!

திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் கட்டிய தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் கட்டிய தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாராபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் சிவக்குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால்  இவர்கள் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில் அவருக்கு  பழனிச்சாமி என்பவருடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பெண் நேற்று இரவு வீட்டின் குளியல் அறையில் தாலியை கழற்றி வைத்து விட்டு தன்னுடைய காதலுடன் சென்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் ஓமலூர் காவல்நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் கணவர், மற்றும் காதலர் முன்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தன்னைத் தனது காதலனுடன் அனுப்பிவைக்காவிட்டால் உச்சநீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என அந்தப் பெண் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் விருப்பப்படி அவரை அவரது காதலனுடன் போலீசார் சேர்த்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.