‘தாலிக்கு மகன், ஜாலிக்கு அப்பா’-தாரத்தை அனுப்பி தந்தைக்கே தரகரான மகன்..
ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் உள்ள டங்கிபுராவில் மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் மாமனார் அந்த பெண்ணை வயல்வெளிக்கு விவசாய வேலைக்கு தனது பண்ணைக்கு அழைத்து சென்றார்.
ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் உள்ள டங்கிபுரா பகுதியில் ஒரு கல்யாணமாகி வந்த ஒரு பெண்ணை மாமனார் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் உள்ள டங்கிபுராவில் மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் மாமனார் அந்த பெண்ணை வயல்வெளிக்கு விவசாய வேலைக்கு தனது பண்ணைக்கு அழைத்து சென்றார்.அப்போது அங்கு அவர் அந்த பெண்ணை வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்தார்.
இதனால் அதிர்ச்சியான அந்த பெண் இந்த விஷயத்தை தனது கணவரிடம் கூறியதற்கு அவர் ,பெல்ட்டை உருவி அந்த பெண்ணை பலமாக தாக்கியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தனது அப்பா எப்ப கூப்பிட்டாலும் அவரோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டுமென கூறி ஒரு அறைக்குள் போட்டு அப்பெண்ணை அடைத்து அந்த வீட்டிலுள்ள அவரது தம்பிகள்,சகோதரிகள்,மாமியார் ,மாமனார் அனைவரும் கொடுமை படுத்தியுள்ளனர் .
பிறகு அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி வந்து போலீசில் அவர்கள் மீது நேற்று புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .