தாராள பிரபுவை பார்த்துவிட்டு…. விவேக்கை பாராட்டிய சிம்பு! காரணம் தெரியுமா?

 

தாராள பிரபுவை பார்த்துவிட்டு…. விவேக்கை பாராட்டிய சிம்பு! காரணம் தெரியுமா?

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் ஹரிஷ் கல்யாண். பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண்  தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். 

 

இப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் வைரமுத்து இயக்கத்தில் அடுத்ததாக  ‘தாராள பிரபு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் ஜான் ஆபிரகாம் நடித்த விக்கி டோனர் படத்தின் ரீமேக்காகும். இப்படம் விந்தணுக்களைத் தானமாக அளிப்பவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண் விந்தணுக்களை தானமாக கொடுப்பவராகவும், மருத்துவராக பிரபல காமெடி ஜாம்பவான் விவேக்கும் நடித்துள்ளனர். விவேக்கிடம் நான் ரஜினி ஸ்டைலை பார்க்கிறேன் என்று தாராள பிரபு படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஹரீஸ் கல்யாண் கூறியிருந்தார். இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் முதல்முறையாக 8 இசையமைப்பாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

simbu harish kalyan

இந்நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்டு வெளியேறியதிலிருந்து ஹரிஷ் கல்யாணை ஊக்கப்படுத்திவருகிறார் சிம்பு. இருவருக்குள்ளேயும் இணைப்பிரியா நட்பு உள்ளது. அதன்காரணமாக தாராள பிரபு படத்தை பார்க்குமாறு சிம்புவிடம் அன்பு கோரிக்கை வைத்துள்ளார் ஹரிஷ். உடனே சிம்புவும் தாராள பிரபு படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு விவேக்கிற்கு போனை போட்ட சிம்பு, “அண்ணே உங்க நடிப்பு பிரமாதம். இத்தணை வருஷத்துக்கு  பின்பும் தத்ரூபமான நடிப்பை தாராள பிரபு படத்தில் காண முடிகிறது”என விவேக்கை பாராட்டியிருக்கிறார். அத்துடன் படத்தின் கதைக்கரு நன்றாக இருப்பதாக படக்குழுவினரையும், நண்பர் ஹரிஷ் கல்யாணையும் சிம்பு பாராட்டியுள்ளார்.