தாய் கழகத்தோடையே போய் சேர்ந்துவிடுகிறோம்! ஆனா எனக்கு எந்த பதவியும் வேணாங்க…   ஜெ.தீபா அதிரடி!

 

தாய் கழகத்தோடையே போய் சேர்ந்துவிடுகிறோம்! ஆனா எனக்கு எந்த பதவியும் வேணாங்க…   ஜெ.தீபா அதிரடி!

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

தாய் கழகத்தோடையே போய் சேர்ந்துவிடுகிறோம்! ஆனா எனக்கு எந்த பதவியும் வேணாங்க…   ஜெ.தீபா அதிரடி!

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய 
ஜெ.தீபா. “ கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் 
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தாய்க்கழகமான அதிமுகவுடன் இணைகிறது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே அதிகமுகவுடன் அமமுகவை இணைக்கிறோம். உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன், அதிமுகவுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது. 

போயஸ் கார்டன் வீடு எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. சட்டரீதியாக சொத்தை மீட்பேன். சொத்தை மீட்டபின் ட்ரஸ்ட் ஆரம்பித்து மக்களுக்கு உதவுவேன். அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவுடனே இணைகிறேன். இன்று தான் அதிமுக தலைமை கழகத்தில் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று கூறினார்.