தாயை துரத்தி துரத்தி காதலித்த இளைஞர்: திருமணத்திற்கு உடன்படாததால் நடந்த விபரீதம்!

 

தாயை துரத்தி துரத்தி காதலித்த இளைஞர்: திருமணத்திற்கு உடன்படாததால் நடந்த விபரீதம்!

ஒருதலை காதல் விவகாரத்தால் பெண்ணின் மகளை கடத்திய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

புதுடெல்லி:  ஒருதலை காதல் விவகாரத்தால் பெண்ணின் மகளை கடத்திய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

டெல்லியில் மெக்கானிகே தொழில் செய்து வந்தவர்  கமலேஷ். இவர் அதே பகுதியில் வசித்து வந்த நான்கு  குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கமலேஷின்  காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். 

abuse

இந்நிலையில் 3 ஆம் தேதியன்று  அந்த பெண்ணின் கடைசி மகளான 9 வயது சிறுமி கடைக்கு செல்வதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு  திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் சிறுமியை இளைஞர் ஒருவர் அழைத்துச் செல்வது தெரியவந்தது. அந்த இளைஞர் தன்னை ஒருதலையாகக் காதலித்து வரும் கமலேஷ் என்று அந்த பெண் போலீசில் கூறியுள்ளார். 

arrest

இதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, போலீசார் கமலேஷை கைது செய்தனர். மேலும் சிறுமியையும் பத்திரமாக மீட்டனர்.  கமலேஷிடம்  நடத்திய விசாரணையில், சிறுமியின் தாயை தான்  திருமணம் செய்ய விரும்பியதாகவும், அதற்கு அவர் உடன்படாததால், சிறுமியை கடத்தி பணியவைக்க எண்ணியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.