தாயை ஆபாசமாகப் பேசிய தாய்மாமன் : கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் !

 

தாயை ஆபாசமாகப் பேசிய தாய்மாமன் : கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் !

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் நேற்று இரவு குடித்து விட்டு வந்து சரஸ்வதியை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

Gokulraj

எப்போதுமே அவர் குடித்து விட்டு சரஸ்வதியைத் திட்டுவதாகக் கூறப்படுகிறது. நேற்றும் அதே போலத் திட்டுவதைப் பார்த்த, கோகுல் ராஜ் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். வெளியே சென்றும் கூட, வாசலில் நின்று கொண்டு மீண்டும் எத்திராஜ் திட்ட ஆரம்பித்துள்ளார். 

Ethiraj

இதனால் ஆத்திரமடைந்த கோகுல் ராஜ் அவரது தாய்மாமனை அருகே இருந்த கருங்கல்லைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். அதில் தலையில் படுகாயம் அடைந்த எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் எத்திராஜின் உடலைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், பரங்கிமலை காவல்துறையினர் கோகுல்ராஜைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.