தாம்பரத்தில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

தாம்பரத்தில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகின்ற 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு முந்தைய நாளான 5-ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

இதனால், நாளை முதல் 6-ஆம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அவ்வாறு ஏற்படும் கூட்ட நெரிசல்களை குறைக்கும் விதமாக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நாளை(3-ஆம் தேதி) மற்றும் 5-ஆம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு நெல்லை வரை செல்லக்கூடிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், அதே ரயில் மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 7.10 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.